பெயர்ச்சொல் - எல்லாரும் இன்புற Book Back Questions & Answers

Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக

  • 1. கருணை

    Correct answer: இரக்கம்

    View explanation


  • 2. அச்சம்

    Correct answer: பயம்

    View explanation


  • 3. ஆசை

    Correct answer: விருப்பம்

    View explanation


  • இருபொருள் தருக

  • 1. ஆறு

    Correct answer: ஆறு - நதி ஆறு - எண்

    View explanation


  • 2. திங்கள்

    Correct answer: திங்கள் – கிழமை, மாதம், நிலவு

    View explanation


  • 3. ஓடு

    Correct answer: ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது

    View explanation


  • 4. நகை

    Correct answer: நகை – அணிகலன், புன்னகை

    View explanation


  • ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

  • 1. அரம் – அறம்

    Correct answer: அரம் – கூர்மையான கருவி – அரத்தினைக் கொண்டு இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவர். அறம் – தர்மம் – அறசெயல்களின் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.

    View explanation


  • 2. மனம் – மணம்

    Correct answer: மனம் – உள்ளம் – மனம் விட்டு பேசினால் பிரச்சனைகள் வராது. மணம் – வாசனை – மல்லிகை மணம் தோட்டமெங்கும் வீசும்.

    View explanation


  • கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக

  • 1. பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

    Correct answer: 1. ஆசிரியர் 2. ஓணான் 3. கிளி 4. தேனி 5. தையல் 6. பழம் 7. பூனை 8. மனிதன் 9. மாணவன் 10. மான் 11. வௌவால்.

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

    அ) பறவை

    ஆ) மண்

    இ) முக்காலி

    ஈ) மரங்கொத்தி

    Correct answer: ஆ) மண்

    View explanation


  • 2. காரணப்பெயரை வட்டமிடுக.

    அ) மரம்

    ஆ) வளையல்

    இ) சுவர்

    ஈ) யானை

    Correct answer: ஆ) வளையல்

    View explanation


  • 3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

    அ) வயல்

    ஆ) வாழை

    இ) மீன்கொத்தி

    ஈ) பறவை

    Correct answer: ஆ) வாழை

    View explanation


  • சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

  • 1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

    Correct answer: மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்

    View explanation


  • 2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.

    Correct answer: அமுதசுரபியைப் பெற்றாள்.

    View explanation


  • 3. சிறைச் சாலைக்குச் சென்று உணவிட்டாள்

    Correct answer: ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.

    View explanation


  • 4. அமுதசுரபியைப் பெற்றாள்

    Correct answer: சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.

    View explanation


  • 5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.

    Correct answer: சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

    View explanation


  • பின்வரும் பாடலைப் படித்து அறுவகைப் பெயர்களைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக

  • 1. விடியலில் துயில் எழுந்தேன்

    Correct answer: விடியல் – காலப்பெயர்

    View explanation


  • 2. இறைவனைக் கை தொழுதேன்

    Correct answer: கை – சினைப்பெயர்

    View explanation


  • 3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன்

    Correct answer: மதுரை – இடப்பெயர்

    View explanation


  • 4. புத்தகம் வாங்கி வந்தேன்

    Correct answer: புத்தகம் – பொருட்பெயர்

    View explanation


  • 5. கற்றலைத் தொடர்வோம் இனி

    Correct answer: கற்றல் – தொழிற்பெயர்

    View explanation


  • 6. நன்மைகள் பெருகும் நனி

    Correct answer: நன்மைகள் – பண்புப்பெயர்

    View explanation


  • பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுக

  • 1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.

    Correct answer: (i) கைகள் – சினைப்பெயர்

    View explanation


  • 2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்

    Correct answer: அடைதல் – தொழிற்பெயர்.

    View explanation


  • 3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

    Correct answer: அடங்கல் – தொழிற்பெயர்.

    View explanation


  • 4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.

    Correct answer: நீதிநூல் – பொருட்பெயர்

    View explanation


  • 5. மாலை முழுதும் விளையாட்டு.

    Correct answer: மாலை – காலப்பெயர்

    View explanation


  • 6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.

    Correct answer: மேலோர் – பொருட்பெயர்

    View explanation


  • புதிர்ச் சொல் கண்டுபிடி

  • 1. இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?

    Correct answer: அறம்

    View explanation