கண்மணியே கண்ணுறங்கு - பாடறிந்து ஒழுகுதல் Book Back Questions & Answers
Unit 4 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. பாட்டிசைத்து என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பாட்டி+சைத்து
ஆ) பாட்டி+இசைத்து
இ) பாட்டு+இசைத்து
ஈ) பாட்டு+சைத்து
Correct answer: இ) பாட்டு+இசைத்து
-
2. கண்ணுறங்கு என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) கண்+உறங்கு
ஆ) கண்ணு+உறங்கு
இ) கண்+றங்கு
ஈ) கண்ணு+றங்கு
Correct answer: அ) கண்+உறங்கு
-
3. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) வாழையிலை
ஆ)வாழைஇலை
இ) வாழைலை
ஈ)வாழிலை
Correct answer: அ) வாழையிலை
-
4. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) கைமர்த்தி
ஆ) கைஅமர்த்தி
இ) கையமர்த்தி
ஈ) கையைமர்த்தி
Correct answer: இ) கையமர்த்தி
-
5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் …………………
அ) மறைந்த
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
Correct answer: அ) மறைந்த
-
1. நந்தவனம்
Correct answer: பூஞ்சோலை
-
2. பண்
Correct answer: இசை
-
3. பார்
Correct answer: உலகம்
-
4. இழைத்து
Correct answer: செய்து